சனாதனம் என்பது பெருநெருப்பு-அதைச்
சாடிடும் வேலை நம்பொறுப்பு!
வினாவிடும் கேள்வியை முன்னெழுப்பு-சங்கி
விளைத்திடும் கேட்டால் பேரிழப்பு!
சதியெனும் உடன்கட்டை ஏறவைக்கும்-பெண்ணை
சதிராடும் தாசியாய் மாறவைக்கும்!
விதியென சாதியை ஏற்கவைக்கும்!-மனு
விதிப்படி வர்ணம் கற்கவைக்கும்!
பார்ப்பான் வைசியன் சத்ரியனோடு-மேலும்
பாவப் பிறவி சூத்திரனாம்!
ஆர்ப்பான் நம்மிடை சனாதனத்தான்!-அவன்
ஆட்டம் முடிப்பதே நம்நலந்தான்!
பெண்ணடி மைத்தனம் பேணிநிற்கும்-சனாதனப்
பேச்சில் தீண்டாமை மூச்சிருக்கும்!
மண்ணிலே மதவெறி ஊட்டிவைக்கும்!-மக்கள்
மண்டையில் பிரிவினை ஏற்றிவைக்கும்!
கிளிசரின் போட்டு அழுதிடுவான்!-தேசம்
கீழுறும் செயலைச் செய்திடுவான்!
உளியாகி நாட்டை உடைத்திடுவான்!-பேச்சில்
உத்தமன் போலவே நடித்திடுவான்!
இந்து முஸ்லீம் கிருத்துவர்கள் -இங்கு
இணைந்து இருப்பதை வெறுப்பவர்கள்!
சந்து பொந்தென சதிசெய்வார்-சனாதனச்
சாக்கடை புத்தியால் விதிசெய்வார்!