articles

சனாதனச் சதி கோவி.பால.முருகு

சனாதனம் என்பது பெருநெருப்பு-அதைச்  

  சாடிடும் வேலை நம்பொறுப்பு!

வினாவிடும் கேள்வியை முன்னெழுப்பு-சங்கி

    விளைத்திடும்  கேட்டால் பேரிழப்பு!

 சதியெனும் உடன்கட்டை ஏறவைக்கும்-பெண்ணை  

   சதிராடும் தாசியாய் மாறவைக்கும்!

விதியென சாதியை ஏற்கவைக்கும்!-மனு    

  விதிப்படி  வர்ணம் கற்கவைக்கும்!  

பார்ப்பான் வைசியன் சத்ரியனோடு-மேலும்      

   பாவப்    பிறவி   சூத்திரனாம்!

ஆர்ப்பான் நம்மிடை சனாதனத்தான்!-அவன்      

  ஆட்டம்  முடிப்பதே  நம்நலந்தான்!  

பெண்ணடி  மைத்தனம் பேணிநிற்கும்-சனாதனப்    

   பேச்சில்  தீண்டாமை மூச்சிருக்கும்!

மண்ணிலே மதவெறி ஊட்டிவைக்கும்!-மக்கள்  

    மண்டையில் பிரிவினை ஏற்றிவைக்கும்!  

கிளிசரின் போட்டு அழுதிடுவான்!-தேசம்    

  கீழுறும் செயலைச் செய்திடுவான்!

உளியாகி  நாட்டை உடைத்திடுவான்!-பேச்சில்  

    உத்தமன் போலவே நடித்திடுவான்!  

இந்து முஸ்லீம் கிருத்துவர்கள் -இங்கு  

     இணைந்து இருப்பதை வெறுப்பவர்கள்!

சந்து   பொந்தென சதிசெய்வார்-சனாதனச்

     சாக்கடை புத்தியால் விதிசெய்வார்!